அலைகள் ஓய்வதில்லை
இயன்றதைச் செய்துவிட்டு
அசையாமல் படுத்திருந்தேன்
ஆடையின் எடைகூடப் பாரமாய்
உயிரின் ஓசை ரீங்காரத்துடன்
வந்து விழுந்தது வானொலியில்
வாசம் கூட உண்டா இசைக்கு?
நேரமா காலமா ஏதும் தெரியாமல்
ஒரு யோகிபோல் மனங்கொண்டு
நாதத்தில் மோட்சம் காண
நான் என்னை மறந்தேபோனேன்.
சகி
No comments:
Post a Comment