Sunday, November 10, 2024



இணை


சாரல்மழை விட்டதும்

நம்பர் போட்ட மரமொன்றின் கிளையமர்ந்து

 பார்த்துப் பார்த்து கேட்கிறது மஞ்சள் மூக்கு ஆள்காட்டி.

 பதிலேதும் சொல்லாமல் ரசிக்கிறது

இறகுரசி அமர்ந்திருக்கும் இணையொன்று.

கேள்வி, பதிலுக்காக கேட்கப்படுகிறதா

தலையாட்டலுக்காக கேட்கப்படுகிறதா

 என்பதைப் புரிந்துகொள்வதில் ஒளிந்துள்ளது

சுமுகவாழ்வின் சூட்சுமம்.


-சகி





No comments:

Post a Comment